புழல்: சோழவரம் அருகே ஒரு செல்போன் டவரில் குடிபோதையுடன் ஏறிய வாலிபர், அங்கிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொள்ள போவதாக மிரட்டினார். அவரிடம் போலீசார், தீயணைப்பு படையினர் சமரச பேச்சுவார்த்தை நடத்தி கீழே இறக்கினர். சோழவரம் அருகே ஆத்தூர், வி.ஜி.மேடு பகுதியை சேர்ந்தவர் அஜித் (25). கூலித்தொழிலாளி. நேற்று மாலை குடிபோதையில் அஜித் அங்குள்ள ஒரு செல்போன் டவர்மீது ஏறி நின்று கொண்டு, அங்கிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டல் விடுத்து சத்தம் போட்டுள்ளார். அவரை கீழே இறக்க அக்கம்பக்கத்தினர் நீண்ட நேரம் போராடியும் அஜித் கீழே இறங்கிவர மறுத்துள்ளார்.