முதல்வர் மு.க.ஸ்டாலினின் புகைப்பட கண்காட்சி திறக்க கமல்ஹாசனுக்கு அழைப்பு

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாள் விழாவின் புகைப்பட கண்காட்சியை  திறந்து வைக்க மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு  அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மார்ச் 1ம் தேதி தனது 70வது பிறந்தநாளை கொண்டாட இருக்கிறார். இதனை முன்னிட்டு வரும் 28ம் தேதி பாரிமுனையில் உள்ள  ராஜாஅண்ணாமலை மன்றத்தில் புகைப்படக் கண்காட்சி நடைபெறுகிறது. இதனை திறந்து வைக்க மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசனை, இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா மற்றும் ஐசரி கணேஷ் ஆகியோர் சந்தித்தனர்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் அலுவலகத்தில் கமல்ஹாசனை சந்தித்து அதற்கான அழைப்பிதழ் வழங்கினர். இந்த புகைப்பட கண்காட்சி, முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்து வந்த பாதையை விவரிக்கும்படி இருக்கும். புகைப்படக் கண்காட்சியை திறந்து வைக்க கமல்ஹாசன் வருவது திமுகவினருக்கு மகிழ்ச்சியை தரும் என அமைச்சர் சேகர் பாபு கூறினார்.

Related Stories: