திருவொற்றியூர்: திருவொற்றியூர் வடிவுடையம்மன் உடனுறை தியாகராஜ சுவாமி கோயிலில் இன்று இரவு 7 மணிக்கு பிரமோற்சவ விழா விநாயகர் உற்சவத்துடன் தொடங்குகிறது. பின்னர் இரவு 8.30 மணி முதல் 9.45 மணிக்குள் கொடியேற்றம் நடைபெறும். தொடர்ந்து, வெள்ளிக்கிழமை மாலை 7.30 மணிக்கு சந்திரசேகர சுவாமி புஷ்ப பல்லக்கு ஊர்வலம் நடக்கிறது.
முக்கிய நிகழ்வாக மார்ச் 4ம் தேதி (சனிக்கிழமை) காலை 8 மணி முதல் 10.45 மணிக்குள் சந்திரசேகரர் சுவாமி திருத்தேர் வீதியுலா நடக்கிறது.