திருவொற்றியூர்: ஆவடி காவல் ஆணையரகம், செங்குன்றம் காவல் மாவட்டத்தில் செங்குன்றம், மணலி மற்றும் எண்ணூர் சரகத்துக்குட்பட்ட 10 காவல் நிலையங்களில் பொதுமக்களிடமிருந்து நிலம், கொடுக்கல் வாங்கல், குடும்ப பிரச்னை, காதல் விவகாரம் போன்ற பல்வேறு புகார் குறித்த மனுக்கள் 500க்கும் மேற்பட்டவை நிலுவையில் உள்ளன.
இந்த புகார்களுக்கு ஒரே இடத்தில் தீர்வு காணும் வகையில், ஆவடி காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின் பேரில், பொதுமக்கள் மனு குறை தீர்ப்பு முகாம் மாதவரம் பால்பண்ணை காவல் நிலைய வளாகத்தில் நடந்தது.