சென்னை: தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெறும் குரூப் 2 தேர்வில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழ் தகுதித் தேர்வில் இருந்து விலக்கு அளித்து உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ் தகுதி தேர்வில் இருந்து விலக்கு கோரி பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
