வாகனம் மோதியதில் எம்டிசி கண்டக்டர் பலி

வேளச்சேரி: தரமணி, தந்தை பெரியார் நகரை சேர்ந்தவர் சேகர் (59). இவர் சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அடையாறு பணிமனையில் கண்டக்டராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் பணி முடிந்து இரவு 10.30 அளவில் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். எம்ஜிஆர் சாலையில் தரமணி அருகே சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் பலத்த காயமடைந்த சேகரை, அப்பகுதியினர் மீட்டு சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சேகர் இறந்தார்.    

Related Stories: