சேலம்: முறைகேடு புகார் தொடர்பான விசாரணை வளையத்தில் சிக்கிய பெரியார் பல்கலைக்கழக பேராசிரியருக்கு, சாகித்ய அகாடமி பிரதிநிதித்துவ குழுவில் பொறுப்பு வழங்கப்பட்டிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஒன்றிய அரசின் கலாச்சார துறையின் கீழ் செயல்பட்டு வரும் சாகித்ய அகாடமி சார்பில், இலக்கிய துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு விருது வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான பொதுக்குழுவில் தலைசிறந்த எழுத்தாளர்கள், மக்கள் பிரதிநிதிகள், நீதிபதிகள், விருது பெற்றவர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் இடம்பெற்றிருப்பார்கள்.