கோவை: கோவையை அலறவிட்ட மக்னா யானை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. தர்மபுரி மாவட்டத்தில் இருந்து பிடிக்கப்பட்டு கோவை மாவட்டம் பொள்ளாச்சி டாப்சிலிப் வனப்பகுதியில் விடுவிக்கப்பட்ட மக்னா யானை வனப்பகுதியில் இருந்து வெளியேறி நேற்று முன்தினம் கோவை மாவட்டம் மதுக்கரை பகுதிக்கு வந்தது. ஊருக்குள் புகுந்த யானை ஒரு வீட்டில் சுற்றுப்புற சுவரை இடித்து தள்ளியது. வனத்துறை வாகனம் ஒன்றை சேதப்படுத்தியது. நேற்று முன்தினம் இரவு முழுவதும் சிறிது ஓய்வு எடுத்த யானை நள்ளிரவில் குனியமுத்தூர் பகுதிக்குள் நுழைந்தது. இந்த யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறை முடிவு செய்தனர். இதற்காக தயார் நிலையில் மருத்துவக்குழுவினர் இருந்தனர்.