திமுக வார்டு உறுப்பினர் கொலை வழக்கில் சோமங்கலம் உளவு பிரிவு காவலர் பெண் குற்றவாளியுடன் ஆபாச பேச்சு: இணையத்தில் ஆடியோ வைரல்

சென்னை: திமுக வார்டு உறுப்பினர் கொலை வழக்கில், முக்கிய பெண் குற்றவாளி ஒருவருடன் உளவுத்துறை காவலர் ஒருவர் ஆபாசமாக பேசும் ஆடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இது போலீசார் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாம்பரம் மாநகர காவல் எல்லையில் உள்ள சோமங்கலம் காவல் நிலைய கட்டுபாட்டில் உள்ளது நடுவீரப்பட்டு ஊராட்சி. எட்டையாபுரம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (30). இவர், நடுவீரப்பட்டு ஊராட்சி 7வது வார்டு உறுப்பினராக இருந்தார். மேலும், திமுக வார்டு செயலாளராக இருந்தார்.

இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு சதீஷ், அதே பகுதியை சேர்ந்த சிலரால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில், அதே பகுதியை சேர்ந்த பெண் தாதாவும், சாராய வியாபாரியுமான எஸ்தர் (எ) யோகேஸ்வரி (38) என்பவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு எஸ்தர் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இந்நிலையில், பெண் தாதா எஸ்தருடன், சோமங்கலம் காவல் நிலைய ஐஎஸ் எனப்படும், உளவு பிரிவு காவலரான மாதவன் என்பவர், செல்போனில் ஆபாசமாக பேசிக்கொள்ளும் ஆடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அந்த ஆடியோவில் உளவுத்துறை காவலர் மாதவன்,  பெண் தாதாவான எஸ்தரிடம், கொலை, கொலை முயற்சி, வழிப்பறி என ஆறுக்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய, போலீசாரால் தேடப்பட்டு வரும் பிரபல ரவுடி சச்சினை யாரும் பிடிக்க முடியாது. அவன் போலீசின் அனைத்து நுணுக்கங்களையும் தெரிந்து கொண்டவன் என்று மாதவன் கொலை குற்றவாளிக்கு ஆதரவாக பேசியதும், எஸ்தர் (எ) யோகேஸ்வரி, உளவுத்துறை காவலரிடம், என்னை உனக்கு எவ்வளவு பிடிக்கும்.

நீ என்னை எவ்வளவு லவ் பண்ற என கேட்பதும், நீ என்னிடம் வீடியோ காலில் பேசும் போதெல்லாம் நீ உடலில் உடையில்லாமல் இருக்கிறாய் என கூறுவதும், அதற்கு  நீ வீடியோ காலில் என்னோடு பேசு என உளவுத்துறை காவலர் கூறுவதும், பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த தகவல் தாம்பரம் காவல் ஆணையரக அதிகாரிகளுக்கு தெரிந்து, உடனடியாக மாதவனை உளவுத்துறை பொறுப்பில் இருந்து நீக்கி, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்த சம்பவம் போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: