சென்னை: ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க கட்டணமில்லா தொலைபேசி சேவையை அறிவித்து, குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு கூடுதல் டிஜிபி அருண் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக, குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு கூடுதல் டிஜிபி அருண் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து ஆந்திராவுக்கு ரேஷன் அரிசி கடத்துவதை கட்டுப்படுத்தவும் ஏழை, எளிய மக்களுக்கு தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் அரிசியை பெற்று பயனாளிகள் பயன்பெற வேண்டும் என்பதற்காக ரேஷன் அரிசி கடத்தலை தடுக்கும் பொருட்டும், பொதுமக்கள் போலீசாரை எளிதாக தொடர்பு கொள்ள, கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 5995950 வழங்கப்பட்டுள்ளது.
