மெக்சிகோ சிட்டி: மெக்சிகோவில் அகதிகளை ஏற்றி சென்ற பஸ் கவிழ்ந்து 17 பேர் பரிதாபமாக இறந்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தென் அமெரிக்க நாடுகளை சேர்ந்த பலர், மெக்சிகோவுக்கு வருகின்றனர். அங்கிருந்து சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் அகதிகளாக தஞ்சம் புகுந்து வருகின்றனர். இந்நிலையில் மெக்சிகோவின் தெற்கு பகுதியில் உள்ள ஓக்ஸாகா மாகாணத்தில் இருந்து வெனிசுலா, கொலம்பியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த அகதிகள் 40க்கும் மேற்பட்டோர் பஸ்சில் அமெரிக்கா நோக்கி புறப்பட்டனர். பியூப்லா மாகாணத்தில் உள்ள நெடுஞ்சாலையில் பஸ் சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோரம் கவிழ்ந்தது.