பல்லாவரம்: குரோம்பேட்டை அரசு மருத்துவமனையை பன்னோக்கு மருத்துவமனையாக தரம் உயர்த்த விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. செங்கல்பட்டு மாவட்டம், தனியாக பிரிந்து வந்தபோது, குரோம்பேட்டை அரசு மருத்துவமனை மாவட்டத்தின் தலைமை மருத்துவமனையாக, அனைத்து வசதிகளுடன் கூடிய பன்னோக்கு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படும் என்று தமிழ்நாடு முதல்வர் அறிவித்து, முதல்கட்டமாக ரூ.110 கோடி நிதியும் ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவித்தார்.