சென்னை: துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர், இரண்டு நாள் அரசு முறை பயணமாக தமிழ்நாடு வருகையையொட்டி, பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து தலைமை செயலாளர் இறையன்பு தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்திய துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர், அரசு முறை பயணமாக வருகின்ற 28ம் தேதி தமிழ்நாடு வருகிறார்.
அவர் சென்னை மற்றும் புதுச்சேரியில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். தமிழ்நாடு வரஉள்ள நிலையில் அவருக்கு பாதுகாப்பு வழங்குவது குறித்த முன்னேற்பாடுகள் பணிகள் குறித்து, சென்னை தலைமை செயலகத்தில் தலைமை செயலாளர் இறையன்பு தலைமையில் ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது.