திருப்பூர்: பல்லடம் பேருந்து நிலையத்திற்கு எதிரே உள்ள பானிபூரி கடையில் பணிபுரிந்து வந்த வட மாநில இளைஞரும், தமிழக இளைஞர்களும் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இதில் வட மாநில இளைஞர் தலையில் காயம் ஏற்பட்டது. அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பல்லடம் போலிசார் மோதலில் ஈடுபட்ட இளைஞர்களை தடியடி நடத்தி துரத்தியுள்ளார்.