பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் கர்னல் பாண்டியன் மீது 2 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு

சென்னை: பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் கர்னல் பாண்டியன் மீது 2 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ராணுவ வீரர்களான தங்களுக்கு துப்பாக்கி சுடத் தெரியும், குண்டு வைக்கத் தெரியும், தமிழ்நாட்டில் அதைச் செய்ய நேரிடும் என பேசியது சர்ச்சையானது. கர்னல் பாண்டியனின் பொறுப்பற்ற பேச்சு இந்திய இறையாண்மை, பொது அமைதிக்கு எதிரானது என விமர்சனம் எழுந்தது. கர்னல் பாண்டியனின் பேச்சுக்கு கடும் கண்டனமும், எதிர்ப்பும் எழுந்த நிலையில் அவர் மீது 2 பிரிவுகளில் போலீஸ் வழக்குப்பதிவு செய்தது.

Related Stories: