திருவள்ளூர் : சென்னை அயனாவரத்தில் கைது செய்து அழைத்து செல்லப்பட்ட ரவுடி தப்பி ஓட முயன்றதால் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தி பிடித்தனர். அயனாவரத்தில் கடந்த 20ம் தேதி வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்த காவல் உதவி ஆய்வாளர் சங்கர் இரும்பு கம்பியால் தாக்கப்பட்டார். கவுதம், பெண்டு சூர்யா, அஜித் ஆகிய 3 பேர் தாக்குதல் நடத்தியது விசாரணையின் தெரிய வந்ததை அடுத்து கவுதமும் அஜித்தும் நேற்று காலையில் பிடிபட்டனர். திருவள்ளூரில் உள்ள உறவினர் வீட்டில் பதுங்கி இருந்த சூர்யாவை தனிப்படை போலீசார் நேற்று இரவு கைது செய்தனர்.