திருத்தணி: திருத்தணியில் உடல்நலக் குறைவால் கவுன்சிலர் இறந்தார். திருத்தணி அமுதாவரம் பகுதியில் வசிப்பவர் நந்தா என்ற நந்தகுமார் (30). திருத்தணி நகராட்சியின் 9வது வார்டு திமுக கவுன்சிலர். திருமணமாகவில்லை. நந்தக்குமார் வீடு கட்டுவதற்கான கட்டுமானப் பணிக்கு எம்.சான்ட், ஜல்லி விற்பனை செய்து வருகிறார். கடந்த சில தினங்களாக அவருக்கு ரத்த அழுத்தம் அதிகரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து திருத்தணியில் சிகிச்சைபெற்றார். பின்னர் மேல் சிகிச்சைக்காக வானகரம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.