உத்திரமேரூர்: உத்திரமேரூரில் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் ஒன்று கூடல் விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. விழாவில், பவுடா தொண்டு நிறுவன மேலாண்மை இயக்குனர் ஜாஸ்மின்தம்பி தலைமை தாங்கினார். இதில், துணை மேலாண்மை இயக்குனர் ஆல்பினாஜாஸ், முதுநிலை பொது மேலாளர் பாரி ஆகியோர் முன்னிலை வகித்தார். உதவி பொது மேலாளர் பக்தன்அருள்ராஜ், உத்திரமேரூர் கிளை மேலாளர் தங்கவேல் ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர். இந்நிகழ்ச்சியில், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா உத்திரமேரூர் கிளை மேலாளர் வீரன் கலந்து கொண்டு பேசுகையில், ‘மகளிர் சுய உதவி குழுக்களுக்கு பல்வேறு வகையில் தொடர்ந்து கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது.
