தாம்பரம்: தாம்பரம் அருகே காதலன் வேறு பெண்ணை நேசிப்பதை அறிந்த, நர்சிங் மாணவி மன வேதனையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தாம்பரம் அடுத்த சிட்லபாக்கம், கோதாவரி தெருவை சேர்ந்தவர் மாலினி. இவரது மகள் கவிதா (16, பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன). தனியார் நர்சிங் கல்லூரியில் படித்து வந்த கவிதா, தன்னுடன் படிக்கும் சக மாணவனுடன் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் காதலித்து வந்தனர். இந்நிலையில், சமீப காலமாக கவிதாவுடன் பேசுவதை காதலன் தவிர்த்து வந்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி கவிதா விசாரித்தபோது, காதலன் வேறொரு பெண்ணை காதலிப்பது தெரிந்துள்ளது.