சென்னை: மீஞ்சூரில் உள்ள கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்தின் குடிநீர் குழாய்களில் பராமரிப்பு பணிகள் 3 நாட்களுக்கு நடைபெறுவதால், பொதுமக்கள் தேவையான குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும், என சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை குடிநீர் வடிகால் வாரியம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: மீஞ்சூரில் உள்ள நாளொன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்திலிருந்து குடிநீர் எடுத்துச் செல்லும் 1000 மி.மீ விட்டமுள்ள பிரதான குழாயில் வரும் நாளை (23ம் தேதி) காலை 8 மணி முதல் 25ம் தேதி காலை 8 மணி வரை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே, மாற்று ஏற்பாடாக, மாதவரம், மணலி, திருவொற்றியூர், எர்ணாவூர், கத்திவாக்கம், பட்டேல் நகர், வியாசர்பாடி ஆகிய பகுதிகளுக்கு புழல் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து குடிநீர் வழங்கப்படும்.