கராச்சி: ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் என்று அழைக்கப்படும் சோயிப் அக்தரை, பாலிவுட் சினிமா தயாரிப்பாளர்கள் நடிக்க அழைத்ததாக அவர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும், ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் என்று அழைக்கப்படுபவருமான சோயிப் அக்தர், கடந்த 2011ம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். கடந்த ஆண்டு, தனது வாழ்க்கையின் வரலாற்றை மையமாக கொண்டு ‘ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ்: ரேசிங் அகைன்ஸ்ட் தி ஆட்ஸ்’ என்ற படத்தை தயாரிப்பதாக கூறினார். ஆனால் அந்தப் படத்தின் தயாரிப்பைத் தொடங்கிவிட்டாரா? இல்லையா? என்பது தெரியவில்லை.