பாலிவுட்டில் நடிக்க கூப்பிட்டாங்க! சினிமா ஆசை குறித்து சோயிப் அக்தர் விரக்தி

கராச்சி: ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் என்று அழைக்கப்படும் சோயிப் அக்தரை, பாலிவுட் சினிமா தயாரிப்பாளர்கள் நடிக்க அழைத்ததாக அவர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும், ராவல்பிண்டி  எக்ஸ்பிரஸ் என்று அழைக்கப்படுபவருமான சோயிப் அக்தர், கடந்த 2011ம் ஆண்டில்  சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். கடந்த ஆண்டு, தனது வாழ்க்கையின் வரலாற்றை மையமாக கொண்டு ‘ராவல்பிண்டி  எக்ஸ்பிரஸ்: ரேசிங் அகைன்ஸ்ட் தி ஆட்ஸ்’ என்ற படத்தை தயாரிப்பதாக கூறினார்.  ஆனால் அந்தப் படத்தின் தயாரிப்பைத் தொடங்கிவிட்டாரா? இல்லையா? என்பது  தெரியவில்லை.

இதுதொடர்பாக கடந்த மாதம் அவர் வெளியிட்ட பதிவில், ‘கருத்து  வேறுபாடுகள் மற்றும் ஒப்பந்த மீறல்கள் காரணமாக, எனது வாழ்க்கை வரலாறு  படத்தை எடுக்கவில்லை’ என்று தெரிவித்தார்.  இந்நிலையில் ‘தி எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூன்’ என்ற பத்திரிக்கையில் அவர் அளித்த பேட்டியில், ‘பாலிவுட் இயக்குனர் மகேஷ் பட்டின் க்ரைம் திரைப்படமான ‘கேங்க்ஸ்டர்’ (2005) படத்தில் நடிப்பதற்காக என்னை அணுகினர்’ என்று தெரிவித்துள்ளார். இவ்வாறாக கிரிக்கெட்டில் ஜொலித்த சோயிப் அக்தருக்குள், நீண்ட நாள் சினிமா ஆசை இருப்பதும் அது கனவாகவே இருப்பதாக நெட்டிசன்கள் கூறிவருகின்றனர்.

Related Stories: