தாக்குதல் நடத்தியது யாரு..? டெல்லி ஜே.என்.யூ மாணவருடன் வீடியோ காலில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

சென்னை: தாக்குதலுக்குள்ளான டெல்லி, ஜே.என்.யு. பல்கலைக்கழக மாணவருடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காணொலி வாயிலாக உரையாடினார். ஜே.என்.யூ-வில் படிக்கும் தமிழ்நாடு மாணவர்கள் மீது ஏபிவிபி அமைப்பை சேர்ந்த மாணவர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜே.என்.யூ மாணவர் அமைப்பில் இருக்கும் தமிழ்நாடு மாணவர்களை இவர்கள் தாக்கியுள்ளார்.

இந்த தாக்குதலில் தமிழ்நாடு மாணவர்கள் பலத்த காயம் அடைந்துள்ளனர். ஒரு மாணவருக்கு தலையில் பெரிய அளவில் காயம் ஏற்பட்டு ரத்தம் வந்துள்ளது. இதை தட்டி கேட்ட இன்னும் சில தமிழ்நாடு மாணவர்களையும் ஏபிவிபி அமைப்பினர் சரமாரியாக தாக்கியுள்ளார். இந்த தாக்குதல் தேசிய அளவில் கடும் விமர்சனங்களை சந்தித்துள்ளது.

கடுமையான காயங்களுடன் ஆம்புலன்சில் ஏறிய தமிழ்நாடு மாணவரையும் ஆம்புலன்சில் ஏறி ஏபிவிபி மாணவர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக துணை வேந்தரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று புகார் வைக்கப்பட்டுள்ளது. அங்கு இருக்கும் பெரியார் படம் ஒன்றை ஏபிவிபி மாணவர்கள் உடைத்துள்ளார்.

படம் உடைக்கப்பட்ட காரணத்தால் தமிழ்நாடு மாணவர்கள் அதை தட்டி கேட்டுள்ளனர். இதையடுத்தே ஏபிவிபி மாணவர்கள் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. ஆனால், ஏபிவிபி மாணவர்களோ சத்திரபதி சிவாஜி படத்தை அவமதித்திவிட்டனர். அதை தரையில் போட்டு உடைத்துள்ளார். அதை தட்டி கேட்ட போது சண்டை ஏற்பட்டுவிட்டது. இதில், நாங்கள் யாரையும் அவமதிக்கவில்லை என்று குறிப்பிட்டனர்.

ஜேஎன்யூ பல்கலையில் தமிழ்நாடு மாணவர் தாக்கப்பட்ட விவகாரத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் தாக்கப்பட்ட மாணவர்களுக்கு திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று போன் செய்துள்ளார். வீடியோ காலில் பேசிய உதயநிதி ஸ்டாலின்; எப்படி இருக்கீங்க, நாங்க நடவடிக்கை எடுக்க சொல்லுறோம், கவலைப்படாதீங்க, யார் அட்டாக் பண்ணா, ஏபிவிபி அமைப்பா என்று கேள்வி எழுப்பி, மாணவர்ளிடம் பேசினார்.

Related Stories: