சென்னை: வன கிளிகளை வளர்த்த நடிகர் ரோபோ சங்கருக்கு ரூ.2.5 லட்சம் அபராதம் விதித்து வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். நடிகர் ரோபோ சங்கர் சாலிகிராமத்தில் உள்ள தனது வீட்டில் வளர்க்கும் வனகிளிகள் குறித்த தகவல் யூடியூப்பில் வெளியானது. இதுகுறித்து கிண்டி வனத்துறை அதிகாரிகளுக்கு புகார் வந்ததையடுத்து, வனத்துறை அதிகாரிகள் கடந்த 15ம் தேதி நடிகர் ரோபோ சங்கர் வீட்டில், அனுமதியின்றி வளர்த்து வந்த 2 அலெக்சாண்டிரியன் கிளிகளை பறிமுதல் செய்து உயிரியல் பூங்காவில் ஒப்படைத்தனர்.