மதுராந்தகம்: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் மாசி அமாவாசை விழா கோலாகலமாக நேற்று நடந்தது. இதில், வேள்வி பூஜையை பங்காரு அடிகளார் தொடங்கி வைத்தார். மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் மாசி அமாவாசை தினமான நேற்று காலை மங்கள இசையுடன் நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கியது. அதிகாலை 3 மணியளவில் ஆதிபராசக்தி அம்மனுக்கு அபிஷேக ஆராதனை செய்து, வெள்ளிக்காப்பு அணிவிக்கப்பட்டு மலர்களால் அம்மன் அலங்கரிக்கப்பட்டிருந்தார். இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்த பங்காரு அடிகளாருக்கு அறந்தாங்கி, தேவகோட்டை மாவட்ட ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க சித்தர் சக்திபீட பொறுப்பாளர்கள் பாதபூஜை செய்து வரவேற்பு அளித்தனர்.