புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள இடையாத்தூரில் பொன் மாசிலிங்க அய்யனார் கோயில் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடந்தது. இதில் பங்கேற்பதற்காக புதுகை, திருச்சி, தஞ்சை, சிவகங்கை, ராமநாதபுரம், பெரம்பலூர், அரியலூர், திண்டுக்கல், மதுரையில் இருந்து காளைகள் அழைத்து வரப்பட்டன. இந்த காளைகளுக்கு மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர். இறுதியில் 650 காளைகள், 250 மாடுபிடி வீரர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. காலை 9 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டியை இலுப்பூர் ஆர்டிஓ குழந்தைசாமி, பொன்னமராவதி தாசில்தார் பிரகாஷ் ஆகியோர் துவக்கி வைத்தனர்.