ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் குடும்ப காரணங்களால் தாயகம் திரும்பினார்

சிட்னி: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் குடும்ப காரணங்களால் தாயகம் புறப்பட்டுச் சென்றுள்ளார். இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பாா்டா் - காவஸ்கா் டெஸ்ட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகின்றது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்த நிலையில் 2-0 என இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது.

இன்னும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இரு அணிகளும் விளையாட உள்ளனர். நேற்று முடிவடைந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்நிலையில், ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் குடும்ப காரணங்களால் சிட்னி சென்றுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில நாள்களில் திரும்புவார் என்றும், இந்தூரில் நடைபெறும் மூன்றாவது டெஸ்ட்டில் பங்கேற்பார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. எனினும், பேட் கம்மின்ஸ் மீண்டும் வராத பட்சத்தில் மூன்றாவது டெஸ்டில் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் பேட் கம்மின்ஸ் நாடு திரும்பியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: