ஹவானா: கியூபாவில் மின் உற்பத்தி பெருமளவு பாதிப்பு நேரிட்டு இருப்பதால் அந்நாட்டில் உள்ள 11 மாகாணங்கள் இருளில் மூழ்கியுள்ளன. மின்சார விநியோகம் இயல்பு நிலைக்கு திரும்ப குறைந்தது 1 வாரம் ஆகுமென்று கியூபா கூறியுள்ளது. கரீபியன் தீவுநாடுகளில் ஒன்றான கியூபாவில் பெரும்பாலான மின் உற்பத்தி நிலையங்கள் 40 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து இயங்கி வருகின்றன. போதிய பராமரிப்பின்றி இயக்கப்பட்டு வருவதால் மின் உற்பத்தி நிலையங்களில் அடிக்கடி பழுது ஏற்பட்டு நாடு தழுவியா அளவில் மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது.