சிங்கப்பூர்: கொரோனா தடுப்பூசி போட்ட பின்னர் மரணம் அடைந்த இளைஞரின் குடும்பத்திற்கு ரூ. 1.4 கோடி நிவாரணம் வழங்கப்படும் என்று சிங்கப்பூர் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து காக்க தடுப்பூசிகள் போடப்பட்டன. அந்த வகையில் சிங்கப்பூரில் நான்கு வகையான தடுப்பூசிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. அந்நாட்டு சுகாதாரத்துறை அப்போது வெளியிட்ட அறிவிப்பில், ‘தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ், அனைத்து சிங்கப்பூர் குடிமக்கள், நிரந்தர குடியிருப்பாளர்கள், நீண்ட கால விசா வைத்திருப்பவர்கள் மற்றும் குறுகிய கால விசாக்கள் உள்ளிட்டோருக்கு இலவச தடுப்பூசிகள் போடப்படும். அவ்வாறு தடுப்பூசி போட்டுக் கொள்பவரில் எவராது உயிரிழந்தால், அவர்களுக்கான இழப்பீடு தரப்படும்’ என்று அறிவித்தது. இந்நிலையில் வங்கதேசத்தை சேர்ந்த 28 வயது இளைஞர் ஒருவர், ‘மாடர்னாஸ்பைக்வாக்ஸ்’ என்று தடுப்பூசியை போட்டுக் கொண்டார்.