திருவாரூர்: மோடி ஆட்சியில் அதானி வளர்ந்திருக்கிறார், நாடு வீழ்த்திருக்கிறது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றஞ்சாட்டியுள்ளார். திருவாரூரில் நடைபெறும் காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக கும்பகோணம் வந்திருந்த தமிழ்நாட்டு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “மோடி ஆட்சியில் அதானி வளர்ந்திருக்கிறார், நாடு வீழ்ந்து கிடக்கிறது. ஆயுள் காப்பீட்டுக் கழகம் மற்றும் பாரத ஸ்டேட் வங்கி ஆகியவை அதானி குழுமத்தில் முதலீடு செய்து ஐம்பதாயிரம் கோடி ரூபாய் இழந்துள்ளது.