சென்னை: புழல் மத்திய சிறை வளாகத்தில், 200க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்கள் என மொத்தம் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். கடந்த ஒரு மாதத்தில் புழல் சிறையின் பெண்கள் மற்றும் ஆண்கள் பிரிவுகளில் சிறைக் காவலர்கள் அவ்வப்போது அதிரடி கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது, செல்போன், கஞ்சா உள்ளிட்ட பல்வேறு போதைப்பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த 3 நாட்களுக்கு முன் இரவு நடத்திய சிறைக் காவலர்களின் அதிரடி சோதனையில், ஒரு பெண் கைதி பயன்படுத்திய செல்போன், ஆண்கள் பிரிவில் 2 கைதிகள் பயன்படுத்திய செல்போன், சார்ஜர், பேட்டரி போன்றவற்றை கைப்பற்றினர். இதை தொடர்ந்து, நேற்று முன்தினம் இரவு பெண்கள் பிரிவில் தனித்தனி அறைகளில் இருந்த பெண்களிடம் சிறைக்காவலர்கள் அதிரடி சோதனை நடத்தினர்.