வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு சம்பந்தமாக முதலமைச்சரை சந்தித்து பேசினேன்: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேட்டி

சென்னை: வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு சம்பந்தமாக முதலமைச்சரை சந்தித்து பேசியதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பிறகு அன்புமணி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். வன்னியர்களுக்கான உள் ஒதுக்கீடு எந்த சமுதாயத்திற்கும் எதிரானது கிடையாது. நீர் மேலாண்மை பிரச்சனைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வலியுறுத்தியுள்ளோம் என அவர் கூறினார்.

Related Stories: