சென்னை: வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வரும் அரசு விரைவுப்பேருந்துகளை தாம்பரம் வழியாக இயக்க வேண்டும் என போக்குவரத்து கழகம் அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து அனைத்து கிளை மேலாளர்களுக்கும் விடுக்கப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: அனைத்து ஊர்களில் இருந்தும் சென்னை வரும் பேருந்துகளை தாம்பரம் வழியாக இயக்க அறிவுறுத்தப்படுகிறது. அதன்படி, வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வரும் அரசு விரைவு பேருந்துகள் தாம்பரம் மாநகர பேருந்து நிறுத்தம் அருகே இடதுபுறமாக நின்று பயணிகளை இறக்கிவிடலாம்.