சென்னை: சென்னை குடிநீர் வாரியம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சென்னை குடிநீர் வாரியத்தில் உரிமம் பெற்ற வாகனங்கள் மூலம் மட்டுமே வாரியத்தின் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் கழிவுநீர் உந்து நிலையங்களில் கழிவுநீர் வெளியேற்றப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று சோழிங்கநல்லூர் பகுதியில் ஒக்கியம்மடுவு அருகில் முறைகேடாக கழிவுநீரை திறந்தவெளியில் வெளியேற்றிய இரண்டு தனியார் கழிவுநீர் வாகனங்கள் சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகளால் பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் பகுதிகளில் பறிமுதல் செய்யப்பட்ட்டது.