சென்னை: தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை, ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு நேற்று அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
இந்திய எல்லை பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்கள், இலங்கை படகுகளில் வந்தவர்களால் தாக்கப்பட்டதை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். நாகப்பட்டினத்தை சேர்ந்த முருகன் மற்றும் 6 மீனவர்கள் இந்திய எல்லை பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.