ஆற்றில் மூழ்கி உயரிழந்த மாணவிகளின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம்: அரசுக்கு விஜயகாந்த் வலியுறுத்தல்

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்ட அறிக்கை:

புதுக்கோட்டை மாவட்டம் பிலிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை சேர்ந்த மாணவிகள் தமிழரசி, சோபியா, இனியா, லாவண்யா ஆகிய 4 பேர் மாயனூர் காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் வேதனை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி சார்பில் விளையாட்டு போட்டியில் பங்கேற்க சென்றபோது இந்த விபரீத சம்பவம் நிகழ்ந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இங்கு 4 மாணவிகள் உயிரிழந்திருப்பது ஆசிரியர்களின் கவனக்குறைவே காரணம். பிள்ளைகளை இழந்து பெற்றோர்கள் கதறுவதை பார்த்து மிகுந்த மன வருத்தம் அடைந்தேன். இனி இது போன்ற சம்பவங்கள் தமிழ்நாட்டில் நடைபெறாத வண்ணம் அரசு பார்த்து கொள்ள வேண்டும். மேலும் உயிரிழந்த மாணவிகளின் குடும்பங்களுக்கு தமிழ்நாடு அரசு அறிவித்த நிவாரணம் போதாது. ஒவ்வொரு மாணவியின் குடும்பத்தினருக்கும் தலா ரூ.10 லட்சம் நிவாரண தொகையாக வழங்க வேண்டும்.

Related Stories: