திரைப்பட தயாரிப்பாளர் தேர்தலுக்கு மேலும் ஒரு நீதிபதி நியமனம்

சென்னை: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சில் நிர்வாகிகளுக்கான தேர்தல் மார்ச் 26ம் தேதி நடைபெறும் என்கிற அறிவிப்பை ரத்து செய்யக் கோரிதயாரிப்பாளர்கள் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்த போது தரப்பில் வழக்கறிஞர் தியாகேஸ்வரன் ஆஜரானார். தயாரிப்பாளர் கவுன்சில் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கிருஷ்ணா ரவீந்திரன், செயற்குழுவில் விவாதிக்கப்பட்ட பிறகே தேர்தல் அதிகாரி நியமிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

இதனையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சில் நிர்வாகிகள் தேர்தலுக்கான இரண்டாவது தேர்தல் அலுவலராக சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவரை மேலும் நியமித்து உத்தரவிட்டார். ஏற்கனவே தேர்தல் அதிகாரியாக உள்ள ஓய்வுபெற்ற நீதிபதி வெங்கட்ராமனுடன் இணைந்து பணியாற்றுவார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் முடிவடைந்த பின்னர் அதுகுறித்த அறிக்கையை ஏப்ரல் 3வது வாரத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளார். மேலும் தேர்தலுக்கு பாதுகாப்பு தேவைப்படும் பட்சத்தில் காவல்துறையை அணுகவும் அறிவுறுத்தி உள்ளார்.

Related Stories: