சென்னை: தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் குடியேறியுள்ள வடமாநிலத்தவர்கள் இங்கு கொள்ளை, கொலை போன்ற குற்ற செயல்களில் ஈடுபட்டு விட்டு, எளிதாகத் தப்பிச் சென்று தங்கள் சொந்த மாநிலத்தில் பதுங்கிக் கொள்வதும் வழக்கமாகி விட்டது. வடமாநிலத்தவரின் இந்த அட்டூழியங்கள் தமிழக மக்களுக்கு அச்சத்தையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
