மணலி-எம்.ஜி.ஆர்.நகர், மாதவரம்-தெலுங்கு காலனியில் உள்ள மயானபூமிகளைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாநகராட்சி அறிவுறுத்தல்

சென்னை: மாதவரம்  மண்டலத்திற்குட்பட்ட சாஸ்திரி நகர் மயானபூமியில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், பொதுமக்கள் மணலி-எம்.ஜி.ஆர். நகர் மற்றும்  மாதவரம்-தெலுங்கு காலனியில் உள்ள மயானபூமிகளைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு பெருநகர சென்னை மாநகராட்சி அறிவிப்பு

சென்னை மாநகராட்சி, மாதவரம் மண்டலம், வார்டு-28க்குட்பட்ட சாஸ்திரி நகர் மயானபூமியின் LPG தகனமேடையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால், 20.02.2023 முதல் 21.03.2023 வரை 30 நாட்களுக்கு மேற்கண்ட மயானபூமியில் உடல்களை தகனம் செய்ய இயலாது.

    

எனவே, பராமரிப்புப் பணிகள் நடைபெறும் 20.02.2023 முதல் 21.03.2023 வரையிலான நாட்களுக்கு பொதுமக்கள் அருகிலுள்ள மாதவரம்-தெலுங்கு காலனி மற்றும் மணலி மண்டலம்- எம்.ஜி.ஆர். நகர் மயானபூமிகளில் உள்ள LPG தகன மேடைகளைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது என மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: