சென்னை: கொளத்தூர் தொகுதி சீட் பெற்றுத்தர கே.பி. முனுசாமி ரூ.1 கோடி பணம் கேட்டதாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பு புகார் தெரிவித்துள்ளது. ஆடியோவை வெளியிட்டு கிரீன்வேஸ் சாலையில் பன்னீர்செல்வம் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது; 2021 சட்டமன்ற தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட கே.பி.முனுசாமி ஒரு கோடி ரூபாய் கேட்டார். கே.பி. முனுசாமி ஆடியோ தான் இப்போது வெளியிட்டுள்ளேன்; அமைதியாக இல்லை என்றால் வீடியோவையும் வெளியிடுவேன். கே.பி.முனுசாமிக்கு பதவி கொடுத்ததே ஓ.பன்னீர்செல்வம் தான். இரு அணிகளும் ஒன்றாக இருந்த போதே முனுசாமி பேரம் பேசினார்.