சென்னை: தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு வறண்ட வானிலை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் இன்று முதல் பிப்ரவரி 20-ம் தேதி வரை வறண்ட வானிலை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரியில் குறைந்தபட்ச வெப்ப நிலை இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும். தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அதிகாலையில் பனிமூட்டத்துக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
