விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாமல் பழிவாங்கும் நடவடிக்கையில் ஒன்றிய அரசு ஈடுபடுவதா?: மநீம கண்டனம்

சென்னை: விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாமல் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதா என்று, நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, மநீம சார்பில் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கை:  குஜராத் கலவரம் தொடர்பாக ஆவணப்படம் வெளியிட்ட  பிபிசி நிறுவனத்தின் மும்பை, டெல்லி அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாமல் சிபிஐ வருமான வரி, அமலாக்கத்துறைகள் மூலம் பழிவாங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வது ஏற்கத்தக்கதல்ல. தவறுகளை சுட்டிக்காட்டுவதும், விமர்சிப்பதும் ஊடகங்களின் பணி. அவற்றை ஏற்று திருத்திக்கொள்வதுதான் ஒன்றிய அரசுக்கு அழகு.

அதைவிடுத்து, அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து, விமர்சிப்போரின் குரல்வளையை நெரிக்க முற்படுவது ஜனநாயகத்துக்கும், அரசியலமைப்புக்கும் எதிரானது. எதிர்க்கட்சிகள் மற்றும் ஊடகங்களைப் பழிவாங்க அரசு அமைப்புகளை பயன்படுத்தும் சர்வாதிகாரப்போக்கை  ஒன்றிய அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும். இச்சோதனைக்கு மநீம கடும் கண்டனம் தெரிவிக்கிறது. மக்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை மறந்துவிட வேண்டாம்.

Related Stories: