திருவான்மியூரில் ரூ.1 கோடி மதிப்பு ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு

துரைப்பாக்கம்: திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான, ரூ.1 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டது. சென்னை திருவான்மியூரில் பழமை வாய்ந்த மருந்தீஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு சொந்தமாக நிலங்களும், கட்டிடங்களுடன் கூடிய இடங்களும் உள்ளன. இதில், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள வணிக வளாகத்தில் தலா 315 சதுர அடி கொண்ட 2 கடைகள் ராஜகோபால் என்பவருக்கு வாடகைக்கு விடப்பட்டிருந்தது. அவர், கோயிலுக்கு உரிய வாடகை செலுத்தாமல் ஆக்கிரமித்து வியாபாரம் செய்து வந்தார்.  இதையடுத்து, அறநிலையத்துறையின் சென்னை மண்டலம் 2ன் இணை கமிஷனர் ரேணுகாதேவி உத்தரவுப்படி, உதவி கமிஷனர் பாஸ்கரன் தலைமையில், போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு கடைகள் மீட்கப்பட்டது. கோயில் இடத்தின் மதிப்பு ரூ.1 கோடி ஆகும்.

Related Stories: