சென்னை: தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை சார்பில் ரூ.6.90 கோடி மதிப்பீட்டில் தலைவர்களுக்கு சிலைகளுடன் கூடிய அரங்கங்கள் அமைக்கும் பணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். 2021-22ம் ஆண்டிற்கான செய்தி மக்கள் தொடர்பு துறை மானிய கோரிக்கையில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி.கே.பழனிசாமி கவுண்டர், ஒன்றிய முன்னாள் அமைச்சர் சி.சுப்பிரமணியம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தொழிலதிபர் பொள்ளாச்சி நா.மகாலிங்கம் ஆகியோருக்கு அரங்கம் மற்றும் திருவுருவ சிலைகள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதேபோன்று, சுதந்திர போராட்ட வீரர் தளி பாளையக்காரர் மலையாண்டி வெங்கிடுபதி எத்தலப்பர் நாயக்கர் ஆகியோரின் நினைவை போற்றும் வகையிலும், இன்றைய தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையிலும் திருப்பூரில் அவருக்கு திருவுருவச்சிலை மற்றும் அரங்கம் அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
வி.கே.பழனிசாமி, சி.சுப்பிரமணியம், நா.மகாலிங்கம், மலையாண்டி வெங்கிடுபதி எத்தலப்பர் நாயக்கருக்கு ரூ.6.90 கோடி மதிப்பீட்டில் சிலை, அரங்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
- சுயவிவரம்
- கெ பழனிசாமி
- சி சுப்பிரமணியம்
- என் மகாலிங்கம்
- மயந்தி வெங்கிடுபதி எதாலபர் நாயக்கர்
- முதல்வர் G.K ஸ்டாலின்