புழல்: சென்னை மாநகராட்சி மாதவரம் மண்டலம் 32வது வார்டு புழல் அடுத்த சூரப்பட்டு பாரதிதாசன் நகர், அன்னை இந்திரா நகர் உள்ளிட்ட பகுதிகளில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட சுடுகாடு சுமார் ஐந்து ஏக்கர் பரப்பளவில் இருந்தது. இது படிப்படியாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு தற்போது பாதியாக சுருங்கிவிட்டது. மேலும் சுடுகாட்டுக்கு செல்லும் வழியில் மாதவரம் மண்டல சார்பில், மக்கும் குப்பை, மக்காத குப்பை தர பிரிக்கும் இடமாக உள்ளது. மேலும் தெருக்களில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வைக்கப்படும் குப்பை தொட்டிகள் இங்கு வீணாக போட்டு வைத்துள்ளனர்.