சென்னை: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தென்னிந்திய நடிகர் சங்கம் கடிதம் எழுதியுள்ளது. அந்த கடிதத்தில் கூறியதாவது; பேரன்பிற்கும், பெரும் மரியாதைக்கும் உரிய முதலமைச்சர் அவர்களுக்கு; வணக்கம் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் இன்றைய செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் சாராம்சம், இதுகுறித்து தென்னிந்திய நடிகர் சங்கம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “19 மொழிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி நம் தமிழ்நாட்டுக்கே பெருமை சேர்த்தவர் பாடகி வாணி ஜெயராம். 3 தேசிய விருதுகள், நாட்டிலேயே உயரிய விருதான பத்ம பூஷண் விருது என நீங்கா புகழுடன் வாழ்ந்தவர். கடந்த வாரம் மறைந்த அவரது உடலுக்கு அரசு சார்பில் 30 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதை செலுத்தப்பட்டது.