இரட்டை இலை தற்காலிகம்தான் இபிஎஸ்சுடன் என்றைக்கும் இணையமாட்டோம்: - டிடிவி தினகரன்

ஈரோட்டில் அமமுக கட்சி நிர்வாகியின் குடும்ப நிகழ்ச்சியில் பங்கேற்ற அக்கட்சி பொதுசெயலாளர் டிடிவி தினகரன் நேற்று அளித்த பேட்டி: இந்த இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளருக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதைப்பற்றி நாங்கள் கருத்து கூறவில்லை. அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் நாங்கள் குக்கர் சின்னத்தில் போட்டியிடுவோம். ஜெயலலிதாவின் உண்மை தொண்டர்கள் ஓரணியில் இணைவோம். அப்போது கட்சியினை மீட்டெடுப்போம். இரட்டை இலை சின்னம் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவிடம் இருந்தபோது செல்வாக்கு மிகுந்ததாக இருந்தது. தற்போது எடப்பாடியிடம் அதன் செல்வாக்கினை இழந்து வருகிறது. அந்த சின்னத்தை செல்வாக்கு உள்ள சின்னமாக மாற்றும் காலம் வரும். தற்காலிகமாகத்தான் இரட்டை இலை அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. வாய்ப்பு கிடைத்தால் ஓபிஎஸ்சை சந்திப்போம். இபிஎஸ்சுடன் என்றைக்கும் இணையமாட்டோம். இவ்வாறு டிடிவி தினகரன் கூறினார்.

Related Stories: