நாக்பூர்: சுதந்திரத்தின் போது இருந்த சமத்துவமின்மை இன்றும் தொடர்கிறது என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் வேதனை அடைந்தார். மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தின் முதல் பட்டமளிப்பு விழாவில் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது: நமது அரசியலமைப்பு அபரிமிதமான முன்னேற்றங்களைச் செய்திருந்தாலும், நிறைய வேலைகள் இன்னும் நிறைவேற்றப்பட வேண்டும். இளம் சட்ட மாண வர்களும் பட்டதாரிகளும் அரசியலமைப்பு விழுமியங்களால் வழிநடத்தப்பட்டால் அவர்கள் தோல்வியடைய மாட்டார்கள். நமது அரசியல் அமைப்பு நமது முன்னோர்கள் நமக்கு தந்தது. சிலர் நமது அரசியலமைப்பை முற்றிலும் கேவலமான வார்த்தைகளில் பேசினார்கள். மற்றவர்கள் நமது அரசியலமைப்பின் வெற்றியைப் பற்றி இழிந்தவர்கள்.