சிறுபான்மை மக்களுக்கு துணையாக திராவிட மாடல் ஆட்சி இருக்கும்: அமைச்சர் எ.வ.வேலு

பெந்தேகொஸ்தே திருச்சபைகளின் மாமன்ற கூட்டம் ஈரோட்டில் நேற்று நடைபெற்றது. இதில், அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, சு.முத்துசாமி, கீதா ஜீவன் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது அமைச்சர் எ.வ.வேலு பேசுகையில், திராவிட இயக்கத்தின் முதல் தலைமுறையாக விளங்குபவர் தந்தை பெரியார். தற்போது திராவிட இயக்கத்தின் 4ம் தலைமுறையான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வரும் திராவிட மாடல் ஆட்சியானது சிறுபான்மை மக்களுக்கு என்றைக்கும் துணையாக நிற்கும். தந்தை பெரியாரின் குடும்பத்தை சேர்ந்தவர் தான் எங்கள் வேட்பாளரான ஈவிகேஎஸ் இளங்கோவன். எனவே, சிறுபான்மையின மக்கள் ஆதரவு தர வேண்டும் என்றார். வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் பேசும்போது, நான் ஆரம்பத்தில் இருந்தே கிறிஸ்தவ பள்ளியில் படித்து மேலே வந்தவன். மதச்சார்பின்மை மீது நம்பிக்கை கொண்டவன். மதம் என்ற பெயரால் மனிதர்களை பிரிக்ககூடாது என்பதில் உறுதியாக இருப்பவன். நாம் சாதி, மத வேறுபாடின்றி மனிதர்களாக வாழ வேண்டும் என்றார்.

Related Stories: