சென்னை: சென்னையில் கலைக்கூடல் என்ற பெயரில் 3 நாட்கள் நடைபெறும் கலாச்சார திருவிழாவை இசையமைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான இளையராஜா தொடங்கி வைத்தார். அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் 34-வது அனைத்திந்திய கலைக்கூடல் கலாச்சார திருவிழா தொடங்கி இருக்கிறது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த கலைஞர்கள் பங்கேற்றுள்ளனர். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இளையராஜா தனது இசையில் உருவான ஜனனி ஜனனி ஜகம் நீ எனும் பாடலை பாடி அரங்கத்தில் இருந்தவர்களை உற்சாகப்படுத்தினார்.