புழல்: புழல் சக்திவேல் நகரில் வட மாநிலத்தை சேர்ந்தவர்களின் கோயில் கும்பாபிஷேகம் கடந்த 20 நாட்களுக்கு முன்பு நடந்தது. அப்போது, வட மாநிலத்தை சேர்ந்தவர்களை வரவேற்கும் வகையில் புழல் மத்திய சிறைச்சாலை எதிரே உள்ள காந்தி பிரதான சாலை, சென்னை- கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை சந்திக்கும் இடத்தில் நுழைவாயில் அமைக்கப்பட்டது. இந்த சாலையில் பல அரசு அலுவலகங்கள், தனியார் மற்றும் அரசு பள்ளிகள், மருத்துவமனைகள் என பல செயல்பட்டு வருகிறது. இந்த நுழைவாயிலை கடந்து செல்லும் போது போக்குவரத்து நெரிசலில் சிக்கி பல மணி நேரம் கடந்து செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது.